Spread the love

அரியலூர் அக், 14

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார்.

மேலும் மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை மாடி வீடுகளிலிருந்து கீழே இறக்குவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது மற்றும் எண்ணெயினால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தீப்பிடித்தால் தீயை அணைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *