Spread the love

நாகப்பட்டினம் அக், 12

தமிழகத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட முயன்ற 35 ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *