சேலம் அக், 12
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களிலும், கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 644 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று மாலை வினாடிக்கு 33 ஆயிரத்து 420 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.74 அடியாக இருந்தது.