Spread the love

கரூர் அக், 7

நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதையடுத்து செவிலியர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *