Spread the love

நெல்லை ஆகஸ்ட், 3

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோடாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் அக்க்ஷயா தேவி (வயது 17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை மாணவி வழக்கம்போல் அரசு பேருந்தில் வி.கே.புரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மேலும் பேருந்து மாணவியின் பேருந்து நிலையத்தை தாண்டி சிறிது தூரம் கழித்து நின்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதில் மாணவிக்கு லேசான காயமடைந்தார்.

தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்த வீ.கே.புரம் போலீசார் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *