Spread the love

திருப்பத்தூர் அக், 2

கந்திலி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். கந்திலி ஊராட்சியில் இருளர் இன சமூகத்தினர் பயன்பெற 19 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ஒன்றிய பொறியாளர் மூர்த்தி, ஊராட்சி செயலாளர் கரீம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *