Spread the love

திருப்பத்தூர் அக், 1

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவைகள் அனைத்தும் நாளை காந்தி ஜெயந்தி மற்றும் 9 ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்துப்பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *