திருவண்ணாமலை அக், 1
கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சக்கரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு 619 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்து 43 ஆயிரத்து 459 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இம்முகாமில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடேசன், இணை இயக்குனர் பாலா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், உதவி திட்ட அலுவலர் ஜான்சன், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார் நன்றி கூறினார்.