Spread the love

கோலாலம்பூர் அக், 1

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று வங்கதேசத்தில் தொடங்குகிறது. டி 20 வடிவில் நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகள் கலந்துகொள்கின்றன.

இந்தத் தொடரில் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். 15 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. 3ம் தேதி மலேசியாவுடனும், 4ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இந்திய அணி மோதுகிறது.

மேலும் இந்திய அணி பாகிஸ்தானை 7-ம் தேதி சந்திக்கிறது. தொடர்ந்து 8-ம் தேதி வங்கதேசத்துடனும், 10-ம் தேதி தேதி தாய்லாந்துடனும் மோதுகிறது இந்திய அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *