புதுடெல்லி செப், 30
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணையதளங்களை புனே உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணையதளங்களை முடக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது.