Spread the love

சென்னை செப், 29

உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு, விமான நிலையங்களின் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த மிக முக்கியமான பகுதிகளில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், முக்கியத்துவம் இல்லாத மற்ற பகுதிகளில் தனியார் பாதுகாப்பு படையையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக முதற் கட்டமாக 50 தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன சான்றுகளை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் வழங்கினார். மேலும் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் 2 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *