நெல்லை செப், 24
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ம்தேதி மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை கடைசியாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.இதில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரித்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொடுத்திருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் மீது மனித உரிமைகள் மீறல் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.
