Spread the love

தென்காசி ஆகஸ்ட், 2

தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துள்ளது.

மேலும் வெள்ளப்பெருக்கின்போது குளிப்பது ஆபத்து என்பதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *