Spread the love

நெய்வேலி ஆகஸ்ட், 2

நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார்.

அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள தமிழக அரசின் நிதி உதவியை நேரில் சென்று வழங்கினார்.

உடன் மாவட்ட அமைச்சர் கணேசன் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், பண்ருட்டி ஓன்றியசேர்மன் சபா.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கபடி வீரா்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மறைந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *