Spread the love

அரியலூர் செப், 20

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் காவல் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்து வந்தனர்.

தற்போது ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் வி.கைகாட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *