சென்னை செப், 19
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் செய்கிறார். டெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.