Spread the love

சேலம் செப், 18

பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் மாவட்டத்தில் 35 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் நாளை வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *