Spread the love

நெல்லை செப், 16

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார்.

மேலும் பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொழில்நுட்ப தாள் மற்றும் விளக்கக்காட்சி போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக விவி பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் சைமன் கிறிஸ்டோபர், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியை கல்லூரியின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தனது பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைத் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *