Spread the love

தூத்துக்குடி செப், 16

தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பனால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர் உள்ளிட்ட பலருக்கு, அவர்களை நினைவு கூறும் வகையிலும், வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையிலும் பல இடங்களில் மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு கோவில்பட்டியில் சிலை அமைத்து, அரசு விழா நடத்த வேண்டும். கோவில்பட்டியில் நேதாஜியின் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் 1 ம் தேதி கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து சென்னை வரை சைக்கிளில் சென்று முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்படும், என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *