Spread the love

சிவகங்கை செப், 15

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22 ம்தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மாலை மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.

பின்னர் 23 ம்தேதி காலை பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் காரைக்குடி மகாலில் 11 மணிக்கு பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *