Spread the love

திருவாரூர் செப், 14

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் போஷான் அபியான் என்ற ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட, இயக்குநர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாயபிரமிளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் வட்டார அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *