Spread the love

சென்னை செப், 13

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி இருப்பார் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு வழியனுப்பு விழா நேற்று உயர் நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, இன்று காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது. இதன்பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமிக்கு சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *