மயிலாடுதுறை செப், 10
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள கறிக்குளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஈசானிய தெருவில் உள்ள காமராஜர் அவென்யூ பூங்கா ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தாடாளன்கோவில் பள்ளி அருகில் ரூ.23 லட்சத்தில் கட்டப்படும் சமுதாயக்கூடம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.