டெல்லி செப், 9
பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், அவருக்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தேன். அது மறக்க முடியாத ஒன்று, அவரது அரவணைப்பையும் அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். இதையெல்லாம் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.