கடலூர் செப், 9
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண ஜான்சிராணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன், புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 235 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினர். விழாவில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் லலிதாமணி முல்லைமாறன், கவுன்சிலர்கள் சண்முகம், செல்லபாண்டியன், திமுக நிர்வாகிகள் எழில்வேந்தன், தம்பா என்கிற ஜெயபிரகாஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.