பழனி செப், 6
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்பதாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பழனி முருகன் கோவிலில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டத்தை துவக்கிவைத்த தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறினார்.