திருச்சி செப், 4
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் அக்டோபர் 24 தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-க்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் வருகிற 30 ம்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 30 ம்தேதிக்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.