Spread the love

திருப்பூர் ஜூலை, 31

திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு உடனடியாக புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். மக்களை பாதிக்கும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி, தலைவர் சிங்காரம், நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

#Vanakambharatham#Tirupur#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *