சென்னை பிப், 13
சுப்பிரமணியபுரம் படம் போலவே மற்றொரு படத்தை இந்தாண்டு இயக்க உள்ளதாகவும் அதற்காக இதே கெட்டப்பை பராமரித்து வருவதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் குற்ற பரம்பரை படம் உருவாவது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிராஜாவும் பாலாவும் அப்படத்தில் தன்னை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதனால் வேறு காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
