Spread the love

கீழக்கரை ஜன, 2

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகருக்குள் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றிய பின் ஏர்வாடி, திருப்புல்லாணி, மற்றும் இராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களில் சென்று குடித்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. இதனால் வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பெருநகரங்களில் வாகன சோதனைக்கென பயன்படுத்தும் ஆல்கஹால் பரிசோதனை மிஷின் வேண்டி கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மிஷினின் விலை ரூ.57 ஆயிரம் ஆகும்.

இரண்டு மிஷின்களை கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் தொழிலதிபர் P.R.L. முகம்மது சலீம், தொழிலதிபர் M.முகம்மது காசீம் மற்றும் கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலதிபர் A. ரபீ அகமது இணைந்து இரண்டு மிஷின்களை கீழக்கரை காவல்நிலையத்தில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர்லால் அவர்களிடம் இரு மிஷின்களையும் ஒப்படைத்தனர்.

உடன் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன் கீழக்கரை துணை ஆய்வாளர் வீர கணேசன் உடன் இருந்தனர்.

காவல்துறையின் சார்பில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது‌

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *