சென்னை அக், 1
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு அறிக்கை கூறியது. நாளை தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், 3-ம் தேதி 7 மாவட்டங்களிலும், 4-ம் தேதி 9 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.