Spread the love

கீழக்கரை செப், 9

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 21வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்திக். இவரது வார்டில் தெரு விளக்கு எரியவில்லை என யார் போன் செய்தாலும் உடனடியாக விரைந்து வந்து தெரு விளக்கு எரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.

புதுகிழக்குத்தெரு பள்ளத்துக்குள் தெரு விளக்கு எரியவில்லை என புகார் கொடுத்ததும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மின்வாரிய ஊழியர்கள் நகராட்சி ஊழியர்களுடன் நேரில் நின்று மக்களின் குறை போக்கும் நல்லதோர் கவுன்சிலர் என அப்பகுதி மக்களால் பாரட்டப்படுபவர்.

இவரைப்போன்று ஒவ்வொரு கவுன்சிலரும் செயல்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *