சென்னை செப், 9
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து தொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருந்தால் அதை விற்பது தொடர்பான பத்திரங்களை சார் பதிவாளர்கள் திருப்பி அனுப்புவது வழக்கம். இந்நிலையில் தடை ஆணை இல்லாத பட்சத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.