சென்னை செப், 3
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வில் உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய வருகிற ஒன்பதாம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான உத்தேச விடைகள் அண்மையில் வெளியானது. இதன் மீது ஒன்பதாம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்சர் கீ சேலஞ்ச் பகுதியில் முறையீடு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.