சென்னை ஆக, 9
தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11-ம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. வருகிற 12-ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.