செங்கல்பட்டு ஜூலை, 9
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் சென்னையில் அவ்வப்போது கனமழையும் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.