நீலகிரி ஜூன், 27
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூரில் இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது. மேலும் இன்று கன மழை பெய்யும் என்று முன்னறிவிப்பால் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.