கோவை ஜூன், 11
கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில் வறுமையில் இருப்பவரிடம் குழந்தைகளின் நல்ல முறையில் வளர்ப்பதாக கூறி வாங்கி வந்து தமிழகத்தில் 5 லட்சம் வரை விற்பனை செய்வது தெரிய வந்தது.