சென்னை ஜூன், 1
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. சிறார்கள் வாகனம் ஓட்டுவதாலேயே அதிகமாக விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது