திருப்பூர் மே, 27
திருப்பூர் அருகே ஓட்டப்பாளையத்தில் விநாயகர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் நிலம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டபோது போதுமான நிலம் இல்லாததால் பள்ளிவாசலுக்கு சொந்தமான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் வழங்கினார். அத்துடன் கும்பாபிஷேக நாளன்று சீர்வரிசை வழங்கியும், அன்னதானம் வழங்கியும் தங்கள் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.