திண்டுக்கல் மே, 11
சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை சார்பாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவும் மே 17 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்த விழாவைக் காண சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.