சென்னை மே, 9
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 56 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் ஜூன் 6ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.