சேலம் ஏப்ரல், 27
ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் மாரியம்மன் கோயில் அருகே, நேற்றிரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டார்.
இதில் சுப்பிரமணிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சுப்பிரமணி ஆத்தூர் காவல் நிலையத்திற்க்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.