பாம்பன் ஏப்ரல், 21
தமிழக கடலில் மீன்வளம் காக்க ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் தவிர ஐந்து நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப் படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாம்பன் கடலில் நாட்டுப் படகு மீன்பிடி கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது. கரை திரும்பும் படகுகளில் குவியும் மீன்களை கேரளா அனுப்ப வியாபாரிகள் இன்று குவிந்து வருகின்றனர்.