சென்னை ஏப்ரல், 9
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. சுமார் இரண்டரை வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவான இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாக உள்ளது. இப்படத்திற்காக சூர்யா குதிரை ஏற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.