சென்னை மார்ச், 13
சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்கக் கூடிய மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.