காஞ்சிபுரம் பிப், 24
காஞ்சிபுரத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்தல் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 11ம் தேதி வெளியான முடிவுகளின்படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் பாராட்டப்படத்தக்க ஒன்று.