திண்டுக்கல் ஜன, 31
பழனி முருகன் கோவிலில் பக்தரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூச திருவிழா முடிந்ததும் பக்தர்கள் இரு குழுக்களாக காவடி எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று பக்தர்கள் காவடி எடுத்து வரும்போது கோவில் ஊழியர்களுக்கும், சந்திரன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஊழியர்கள் சந்திரனை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து சக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.