கேரளா ஜன, 21
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல மற்றும் மகர விளக்கு மொத்த வருமானம் ரூ.357.47 கோடியாக அதிகரித்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாத் அறிவித்துள்ளார். இதில் பக்தர்களின் காணிக்கை, பிரசாத விற்பனை வருவாய் உள்ளிட்டவை அடங்கும். கடந்தாண்டை விட நடப்பாண்டில் ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதே போல் கடந்த ஆண்டு விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.