திருப்பூர் ஜன, 13
பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த பொங்கல் விடுமுறையை ஜாலியாக கொண்டாட சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.